
கடந்த சில தினங்களாக டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு புகை மண்டலமாக இருந்து வருகிறது.
இதனால், அங்கு வசித்து வரும் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது டெல்லி அரசு.
இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வுமைய ஆய்வாளர் பிரதீப் ஜான் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு கிழக்கு கடற்கறை பகுதி வழியாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பரவும் எனவும் வடகிழக்கு பருவமழையில் ஏற்பட்டுள்ள இடைவெளி காரணமாக அடுத்த வாரம் தமிழகத்தில் காற்று மாசு அதிகமாக காணப்படும்.’ என்று கூறியுள்ளார்.
Facebook Comments





