
சென்னையில் உள்ள புகழ் பெற்ற மவுண்ட்ரோடு தர்காவில் வியாழக்கிழமை விசேஷ நாளாகும்.
இன்று ரம்ஜான் மாத நோன்பு துவங்க உள்ளதால் அங்கு இருந்த ஆதறவற்றவர்களுக்கு ஆளுக்கு 1000 ரூபாய் வீதம் சுமார் 100 பேருக்கு 1 லட்ச ரூபாயை அதிமுக’ வை சேர்ந்த நடிகர் மற்றும்தயாரிப்பாளருமான ஜெ.எம்.பஷீர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து கொரொனா நிவாரண நிதியாக பலருக்கும் உதவிக்கரம் புரிந்து வருகிறார்.
மேலும் ஆதரவற்றவர்களை தேடிச் சென்று தன்னால் ஆன உதவிகளை செய்வேன் என்றும் திரு. ஜே எம் பஷீர் தெரிவித்தார்.
Facebook Comments









