Spotlightசினிமா

பல வருடங்களுக்குப் பிறகு இணைந்த இசையர்கள்… ரசிகர்கள் மகிழ்ச்சி!!

மிழ் சினிமா கண்டெடுத்து உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இசையமைப்பாளர் தான் இளையராஜா. இவரது இசையில் அதிகம் பாடியவர் என்று கூறினால் அது எஸ் பி பாலசுப்ரமணியம் தான்.

சில வருடங்களாக ராயல்டி தொடர்பான பிரச்சனை எழுந்து இருவரும் ஒருவரையொருவர் சந்தித்திக் கொள்வதில்லை. பாடல்களில் இணைவதில்லை. மேடையில் தோன்றுவதும் இல்லை. இது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவே அமைந்தது.

இந்நிலையில், இளையராஜாவிற்காக வரும் ஞாயிறன்று நடத்தப்படும் இசை கொண்டாடும் இசை நிகழ்ச்சிக்கு இருவரும் இணையவிருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி ரசிகர்களுக்கு தரப்பட்டது. நேற்று, இந்நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்வில் இளையராஜாவும் எஸ் பி பி’யும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டு தங்களது நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.

மீண்டும் இருவரும் இணைவது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button