சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உருவாகி வெற்றி கண்ட திரைப்படம் தான் “இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி”.
இப்படத்தினை இயக்குனர் ஷங்கர் மிகவும் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருந்தார்.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கிய சிம்பு தேவன் மற்றும் ஷங்கர் தரப்பு வடிவேலுவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், சிம்புதேவன் நடிகர் யோகிபாபுவை வைத்து முழுக்க முழுக்க காமெடி படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகவிட்டதாம்.
இப்படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். தயாரிப்பாளர் கார்த்திகேயன் படத்தின் அடுத்த கட்ட பணிகளை செய்து வருகிறாராம்.
காமெடியில் தற்போது மன்னனாக திகழ்ந்து வருபவர் யோகிபாபு, காமெடி கதைகளை யதார்த்தமாக தரக்கூடியவர் இயக்குனர் சிம்புதேவன். இருவரும் இணைவதால் படத்தின் மீது நிச்சயம் மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எழக்கூடும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை.
விரைவில் படத்தினை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.