
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. ஃபைனலுக்கு சென்ற நான்கு பேரில் முகேன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் பிக்பாஸிற்கு பிறகு லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில் “உங்களுடைய அளப்பறிய அன்பிற்கும், ஆதரவிற்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இன்ஸ்டாகிராமில் நான் ஆக்டீவாக இல்லாமல் இருந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு பெரிய விஷயம். உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் இருப்பேன்” என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B3b03R0BoSL/?utm_source=ig_embed
Facebook Comments





