Spotlightஇந்தியா

கொரோனா எதிரொலி: கோடிகளை நிவாரணமாக கொடுத்த பவன் கல்யாண்!

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. மரணமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் இதுபோன்ற எண்ணிக்கை அதிரித்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண், கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி அளித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிதியுதவியை அளித்திருக்கிறார்.

மொத்தமாக சுமார் ரூ. 2 கோடி நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button