உத்திர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் சுமார் 24 பேர் பலியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிகாலை சுமார் 3 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. ஒரு லாரியில் மட்டும் தான் வெளிமாநில தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.
இந்த லாரியில் புலம் பெயர் தொழிலாளர்கள் லிப்ட் கேட்டு சென்றுள்ளனர். லக்னோ வரை சென்று அங்கிருந்து ரயில் பிடித்து சென்றுவிடலாம் என்று நினைத்து பயணம் செய்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள், லாரியில் ஏறிய அரை மணி நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு லாரிகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டுள்ளன. அதில் பயணம் புரிந்த சுமார் 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு லாரி டிரைவர்களில் யாரேனும் ஒருவர் தூங்கியிருக்கக் கூடும் என போலீஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.