Uncategorized

நாங்கள் திருமாவோடு நிற்கிறோம்; அன்புமணிக்கு எதிராக களமிறங்கிய நெட்டிசன்கள்!!

சில தினங்களுக்கு முன் அரக்கோணம் அருகே தலித் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார். மேலும், அக்குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது இரங்கலையும் தெரிவித்து அவர்களுக்கு இழப்பீடும் கொடுத்தார்.

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் அரக்கோணம் படுகொலை சாதி கொலை இல்லை எனவும், திருமாவளவன் தான் இதை சாதி பிரச்சனையாக மாற்றுகிறார் என்றும் படித்த இளைஞர்கள் யாரும் திருமாவின் பின் நிற்பதில்லை எனவும் கூறியிருந்தார்.

அன்புமணியின் இப்பேச்சுக்கு கண்டனம் வழுத்தது. ட்விட்டரில் அவருக்கு எதிராக களமிறங்கினர். படித்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் உலகம் முழுவதும் இருந்து #standwiththiruma , #myleaderthiruma , #isupportthiruma போன்ற ஹேஷ்டாக்குகளை பதிவிட்டனர்.

இதற்கு திருமாவளன் தன்னோடு துணை நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button