தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. விழாவில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பங்கேற்றார்.
தமிழகத்தில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழகர்களுக்கே வழங்கப்பட வேண்டும், தூத்துக்குடி மாவட்ட விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் ஏற்றப்பட்டது.
போன தேர்தலில் என்னை கெஞ்சியவர்கள் எல்லாம் இப்போது அமைச்சர்களாக உள்ளனர். 26 தொகுதியில் நாங்கள் எங்கு போட்டியிட்டாலும் ஜெயிப்போம். இனிமேல் அவர்களுக்கு நாங்கள் யார் என்று தெரியும்.
மாற்றத்திற்கான கூட்டணி என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கூட்டணி உறுதியானது. கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர். என்று பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Facebook Comments