மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியுள்ளது ‘கர்ணன்’. பரியேறும் பெருமாள் என்ற மாபெரும் ஹிட் கொடுத்த இயக்குனரின் அடுத்த படம் என்பதாலும், அசுரன் என்ற பிரம்மாண்டமான ஹிட் கொடுத்த நடிகரின் அடுத்த படம் என்பதாலும் கர்ணன் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் வெளியான கண்டா வரச் சொல்லுங்க மற்றும்ம் பண்டாரத்தி புராணம் என்ற இரு பாடல்களும் மிகப்பெரும் அளவில் பேசும் பொருள் ஆனதாலும், மக்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்றதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம்.
வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதால் படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்க திரையரங்கு உரிமையாளர்கள் போட்டா போட்டி கொண்டிருந்த நிலையில், மிகப்பெரும் தொகைக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறியுள்ளார்.