தெருக்கூத்து தமிழர்களின் பாரம்பரிய கலை. இக்கலை மூலம் தமிழர்களின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் முன்னெடுப்பில் இக்கலை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு நவீன வடிவில் மக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் நடந்து வருகிறது.
அவ்வகையில் உலகில் முதன் முதலாக மொழிக்காக உயிர் நீத்த நம் தமிழ் மாமன்னன் நந்திவர்மனின் மறைக்கப்பட்ட வரலாறு தெருக்கூத்து வடிவமாக்கப்பட்டது.
அது முதன்முறையாக உலகப் புகழ்பெற்ற கம்போடியா அங்கோர்வாட் கோவில் அருகே அரங்கேற்றப்பட்டு உலகத் தமிழர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது வருகிற ஏப்ரல் 28 தெருக்கூத்து கலை ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க, நந்திக் கலம்பகம் தெருக்கூத்து சர் பிட்டி தியாகராயர் ஹாலில் 2 காட்சிகளாக நிகழ்த்தப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவு செய்ய:
https://in.bookmyshow.com/plays/nandhi-varman-in-nandhi-kalamnam/ET00099403
Or
*Call:*95664 57524