Spotlightசினிமா

தியேட்டர்கள் கிடைக்கவில்லை…. விரக்தியில் மன்சூர் அலிகான்!

தனது மகன் அலிகான் துக்லக் கதாநாயகனாக நடிக்க, மன்சூர் அலிகான் தயாரித்து, இயக்கியுள்ள படம் “கடமான்பாறை”. ஆகஸ்ட் 26-ம் தேதி, வரும் வெள்ளிக்கிழமை படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட, முன்கூட்டியே தீர்மானித்து பத்து லட்சம் ரூபாய் செலவில் வெளியீட்டு தேதியுடன் போஸ்டர் அடித்து, தயார் நிலையில் இருந்தார் மன்சூர் அலிகான்.

இந்நிலையில், போதிய திரையரங்குகள் கிடைக்காததால் “கடமான்பாறை” படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவ்வளவு நாள் பொறுத்தும் பயனில்லயே என மன்சூர் அலிகான் வேதனையாக உள்ளார். இன்று இரவுக்குள் எதிர்பார்த்த திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்றால் படத்தினை OTTயில் வெளியிட முடிவு செய்துள்ளார் மன்சூர் அலிகான்.

Facebook Comments

Related Articles

Back to top button