Spotlightசினிமா

இனி குடும்ப படங்களில் மட்டும் தான் நடிப்பேன்… – ப்ரியா ஆனந்த்!

டிகை பிரியா ஆனந்த் வாமனன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். எதிர்நீச்சல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
அதன் பிறகு, நிவின் பாலி நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி வெளிவந்த காயன்குளம் கொச்சுண்ணி என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
வாய்ப்புகள் இன்றி தவித்த அவர் சில மாதங்கள் முன்பு வெளியான எல்கேஜி படத்தில் ஆர்ஜே பாலாஜி உடன் நடித்திருந்தார். இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்தாலும் ரசிகர்கள் தனக்கு கொடுத்த வரவேற்பை பார்த்த கண்கலங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார் ப்ரியா ஆனந்த்.
மேலும் இனிமேல் அடுத்தடுத்து பெயருக்கு படங்கள் பண்ணாமல், குடும்ப ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ள படங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க முடிவெடுத்துள்ளதாக பிரியா ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
ஆனால், சில தினங்களுக்கு முன் இவர் தான் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments

Related Articles

Back to top button