Spotlightசினிமாதமிழ்நாடு

மே 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு.?? கடுமையாக்கப்படும் மாவட்டங்கள்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நான்காம் கட்ட ஊரடங்கும் வரும் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மருத்துவ குழு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில், ஊரடங்கை நிச்சயம் நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில், கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் எனவும், மற்ற மாவடங்களில் ஒரு சில தளர்வுகள் கொடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button