பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் இராணிப்பேட்டையில் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய இராணிப்பேட்டை தொகுதி எம் எல் ஏ ரவி அவர்கள், ‘மணல் கடத்தல், மண் எடுத்து 10 வருஷமா முறைகேடா சம்பாதித்தது யாரு அரக்கோணம் எம்.எல்.ஏ.ரவிதான். இது தெரிஞ்சிதான் எங்க தலைவர் திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயிலுக்கு போவார் என பேசினார்.
அதுக்கு பதில் சொல்லாம காந்தி கல் குவாரி நடத்துறார்னு சொல்லி இருக்க…
அட முட்டாளே… 10 வருஷமா நடக்குறது யார் ஆட்சி?
தமிழ் நாட்டிலேயே நேர்மையான முறையில் கல் குவாரிய நான் நடத்துறேன். 10 வருஷமா உங்க (அதிமுக) ஆட்சிதானே… முடிஞ்சா தப்பு இருக்கான்னு கண்டுபிடி என அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவிக்கு இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான காந்தி சவால் விடுத்தார்.
மத்திய, மாநில அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரசகன் எம்.பி. உட்பட ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.