Spotlightசினிமா

விக்ரமிற்கு தனி மரியாதை கொடுத்த கேரள அரசு!

விக்ரம் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘விக்ரம் 58’. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

‘விக்ரம் 58’ படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறது. இவர், டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் படத்தினை இயக்கிய இயக்குனர் ஆவார்.

மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் பல தோற்றத்தில் தோன்றவிருக்கிறார்.

மேலும், ஐ படத்திற்கு பிறகு விக்ரமின் ராட்சச நடிப்பை இதில் காணலாம் என்கிறார்கள் படக்குழுவினர்.

இதில் இடம்பெறும் இரயில் சண்டைக் காட்சி ஒன்று படத்தில் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார்கள்.

கேரளாவில் பிரசித்திப் பெற்ற இந்து கோவில் ஒன்றில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டது படக்குழு. ஆனால், அந்த கோவில் வளாகத்திற்குள் முதலமைச்சரே ஆனாலும் வாகனத்தில் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதாம்.

விக்ரமின் கேரள ரசிகர்களை கண்டு பிரம்மித்துப் போன கேரள அரசு, விக்ரம் 58 நடத்த அனுமதி அளித்து, வாகனங்கள் கொண்டு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

விக்ரமின் சினிமா வாழ்க்கையில் இப்படம் பெரும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button