Spotlightசினிமா

“அழகிய கண்ணே” படத்திற்காக பாடல் பாடிய GV பிரகாஷ் குமார் !

“அழகிய கண்ணே” படத்திற்காக பாடல் பாடிய GV பிரகாஷ் குமார் !!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.

அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன்,விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் .

N.R.ரகுநந்தன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் ,பாடகர் , இசையமைப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த GV பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் . இப்பாடல் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது என நடிகர் லியோ சிவக்குமார் கூறியுள்ளார் .

நடிகர்கள் :லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி,பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ்

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் – R.விஜயகுமார்
தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்)
பாடல்கள் – வைரமுத்து
இசை – N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவு – A.R.அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத் தமிழன்
நடனம் – ராதிகா
சண்டை பயிற்சி : மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா .
தயாரிப்பு மேற்பார்வை – இளையராஜா செல்வம்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Facebook Comments

Related Articles

Back to top button