அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடிக்க கடந்த் வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் ‘காளிதாஸ்’.
பத்திரிகை மற்றும் இணையதளங்களால் பெரிதாக பாராட்டப்பட்ட இப்படம் மக்கள் மத்தியுலும் பெரிதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வெள்ளியன்று திரையிடப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் இரண்டு மடங்கானது.
இந்நிலையில், பத்திரைகையாளர்களுக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் பரத், ‘ இந்த முழு வெற்றிக்கு காரணம் பத்திரிகையாளர்களால் நீங்கள் தான். நாளுக்கு நாள் இப்படத்தை பற்றி நீங்கள் எழுதிய வரிகள் அனைத்தும் தான், இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணியாக இருந்துள்ளது.
நல்ல படத்தை பத்திரிகையாளர்கள் கொண்டாடாமல் இருந்ததில்லை. அதேபோல் தான் ‘காளிதாஸ்’ என்றொரு படப்பையும் நீங்கள் சரியான பாதையில் எடுத்துச் சென்று வெற்றியாக்கியுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி’ என்று கூறினார்.