Spotlightசினிமா

சூர்யாவுக்கும் நான் தான் சொன்னேன்.. இப்ப கார்த்திக்கும் சொல்றேன் – நடிகர் கருணாஸ் அதிரடி பேச்சு!

2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “விருமன்”.

கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கருணாஸ், “ சூரரைப் போற்று படத்திற்காக சூர்யா நிச்சயம் தேசிய விருது பெறுவார் என்று அன்று முதன் முதலில் நான் தான் கூறினேன். இன்று அது நடந்திருக்கிறது.

அதேபோல், கார்த்திக்கும் கூறுகிறேன். விருமன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் கார்த்தியும் பிரகாஷ்ராஜும் நடித்த காட்சிக்கு நிச்சயம் கார்த்திக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை பெறுவார்” என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button