
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக சர்கார் படம் வெளிவந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டதாம், தற்போது சென்னையில் பிரம்மாண்ட புட்பால் செட் போட்டுள்ளார்களாம்.
இந்த செட்டில் சுமார் 50 நாட்களுக்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம், இப்படத்தை எப்படியாவது தீபாவளிக்கு கொண்டு வர படக்குழு கடுமையாக முயற்சி செய்து வருகின்றது.
இதுவரை விஜய்யுடன் நயன்தாரா, கதிர், யோகிபாபு ஆகியோர் பங்கேற்ற காட்சிகள் எல்லாம் எடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகின்றது.
Facebook Comments




