
அளவு கடந்த அன்பிற்கு சொந்தமானவள் இந்த அன்பிற்கினியாள்..
பகைவரிடத்திலும் அன்பு பாராட்டக்கூடிய பண்பு கொண்டவள்,
பாசம், நேசம் என அனைத்தையும் ஒருசேர கொண்டவள்,
அழகான சிரிப்புக்குச் சொந்தக்காரி இவள்,
மனதில் கவலைகள் பல இருந்தாலும், முகத்தில் துளியும் அதை கொண்டிராதவள்,
புன்னகைக்கு இலக்கணமானவள்,
இவையனைத்தையும் தன்னகத்தே உள்ளடக்கியவள் தான் இந்த ‘அன்பிற்கினியாள்’…
அன்பிற்கினியாள் கதாபாத்திரமாக நடிகை கீர்த்தி பாண்டியன் ஜொலித்திருக்கிறார். நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
அன்பிற்கினியாளின் தந்தையாக அருண் பாண்டியன் உணர்ச்சி பொங்க நடித்திருக்கிறார்.
இயக்குனர் கோகுல் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
பிறரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டுமாயின் இந்த அன்பிற்கினியாளை ஒரு முறை திரையரங்கில் கண்டுகளித்து வரலாம்.
நாளை (மார்ச் 5) முதல் அநேக திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.





