
இயக்குனர் சீனு ராமசாமி முதல்வர் மு க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். தனது சந்திப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ள சீனு ராமசாமி முதல்வரை ஆளும் ஆண் தாய் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, “ என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’ மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் ‘மாமனிதன்’ ‘இடிமுழக்கம்’ ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும் அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக அவர் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகள் நினைவாக, நன்றி கூறும் விதமாக நான் நேசித்து படித்த ஜான் ரீடு எழுதிய ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ நூலினை அவருக்கு தந்தேன்.

அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான ‘உங்களில் ஒருவன்’ நூலில்
கையொப்பமிட்டு பரிசாக தந்தார்.
‘மக்கள் அன்பன்’ என் கண்ணே கலைமானே திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்து வாழ்த்தினார்.” என்று கூறியுள்ளார்.





