Spotlightசினிமா

கஸ்தூரி எண்ட்ரீ; ரணகளத்திற்கு தயாரான பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் களபரங்கள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை சோசீயல் மீடியாவில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரீ ஆகியிருக்கிறார்.

கஸ்தூரி பேசும் அனைத்தும் சர்ச்சையாகி வருவதால், பிக் பாஸ் வீட்டில் அவர் எப்படி இருக்கப் போகிறார். சக போட்டியாளர்கள் அவரை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள், என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சக போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கஸ்தூரி சாக்‌ஷியை அழைத்து, ”உங்க கிட்ட நான் நிறைய கேள்வி கேட்கனும்” என்று தனது வேலையை ஆரம்பிக்கிறார்.

சாக்‌ஷி மீது தொடர்ந்து பல கேள்விகளை கஸ்தூரி வைப்பார் என்று தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button