நேற்று முன்தினம் அகரம் அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய நடிகர் சூர்யா, ‘50 கோடி மாணவர்களின் எதிர்காலத்துக்கான புதிய கல்வி கொள்கை பற்றி பெரிய அளவில் யாரும் விவாதங்களில் பேசவில்லை என்பதை அறியும் போது வருத்தம் ஏற்படுகிறது.
கண்டிப்பாக இந்த விவகாரத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். இல்லையென்றால் எதிர்காலம் இருண்டுபோய்விடும்” என்று சூர்யா புதிய கல்விக் கொள்கையை விமர்சனம் செய்தார்.
சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் H. ராஜா பதில் அளித்த போது, “நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. முதலில் அவர் புதிய தேசிய கல்வி கொள்கைகளில் 400 பக்கங்கள் கொண்ட வரையறை பிடித்தாரா என்று தெரியவில்லை. அதை முழுதாக சூர்யா படித்துவிட்டு பேச வேண்டும்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.