
இங்கிலாந்தில் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அவசர காலத்தில் அவை செயல்படும் முறைகள் குறித்து, லண்டன் வாட்டர்லூவில் உள்ள மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.
சென்னையில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். லண்டன் கிங்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டபின், கிங்ஸ் கல்லூரி அரங்கில், மருத்துவமனை மருத்துவர்களிடையே சற்றுமுன் பேசிய அவர், தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை அமைக்க, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.
Facebook Comments