கட்சி தொடங்கினாலும் தான் முதல்வர் வேட்பாளராக இருக்கமாட்டேன் என்பதில் நடிகர் ரஜினி உறுதியுடன் இருப்பதாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு சொன்னது போலவே நடிகர் ரஜினி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும், 2021 ஆம் ஆண்டின் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கட்சி தொடங்கினாலும் தான் ஏற்கனவே கூறியபடி முதல்வர் வேட்பாளராக இருக்கமாட்டேன் என்பதில் ரஜினி உறுதியாக இருப்பதாக ரஜினி கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு விருப்பம் இல்லையென்றாலும், அவர் வேட்பாளராகவாது இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.