
முகத்தில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் மகாராஷ்டிராவில் ஒருவர் தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர் தங்க நகைகள் மீது ஆர்வம் உடையவர்.
இவர் தற்போது தங்கத்தினால் ஆன மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிந்து வருகிறார். சுமார் 2.89 லட்சம் மதிப்புடைய இந்த மாஸ்க்கில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இதனால் தனக்கு சுவாசத்துக்கு பிரச்னை இல்லை எனக் கூறுகிறார் ஷங்கர் குரேட்.
அதே நேரத்தில் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த தங்க மாஸ்க் உதவுமா என்பது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார்.
Facebook Comments