
பேட்ட திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில மணித்துளிகளுக்கு முன் வெளியானது. படத்திற்கு ’தர்பார்’ என டைட்டில் வைத்துள்ளனர்.
இப்படத்தினை லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இப்படத்தில் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். நயன்தாரா ஜோடியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
வரும் 10-ஆம் தேதி மும்பையில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவிருக்கிறது.
Facebook Comments





