
சில தினங்களுக்கு முன் தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம் பேனர் ஒன்று சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற மாணவி இறந்தது தான்.
சுபஸ்ரீயின்ன் தந்தை ரவி, தாயார் கீதா ஆகியோரை சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி அவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சுபஸ்ரீ பெற்றோர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘ஒரே மகளை இழந்து தவிக்கும் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். சுபஸ்ரீ குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் தமிழக அரசுக்கு வைக்கின்றேன்.
பலியான சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் இருந்து ஒரு ஆறுதல் கூட கிடைக்காதது வருத்தத்திற்குரியது. பேனர் விழுந்து விபத்து ஏற்படவில்லை என ஆளும் கட்சியினர் கூறுவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல உள்ளது. பேனர் குறித்து உரிய சட்டம் கொண்டு வந்தால் தான் காவல்துறையினர் அதை வழிநடத்த முடியும்’ என்று கூறினார்.