Spotlightசினிமா

எனக்காக படம் ஓடல; நல்ல படங்கள்ல நானிருந்தேன்… ரஜினி பேச்சு

லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் தர்பார்.

அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 9ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதன் தெலுங்கு பதிப்பு வெளியீட்டுக்காக ஐதராபாத்தில் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான விழாவில் ரஜினியுடன் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், முருகதாஸ், அனிருத், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், “1976ம் ஆண்டு நான் நடிச்ச தெலுங்குப் படம் அந்துலேனி கதா ரிலீசானது.
இப்ப இங்க இருக்கிறவங்கள்ல நிறைய பேர் அப்ப பிறந்திருக்க மாட்டீங்க.

அந்த காலத்துல இருந்தே, தெலுங்கு ரசிகர்கள், தமிழ் ரசிகர்கள் மாதிரியே என் மேல அன்பு செலுத்துறீங்க. இது எனக்கு கிடைச்ச பாக்கியம்.

நான் நடித்த என்னோட நிறைய படங்கள் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கு.

பெத்த ராயுடு, பாட்ஷா, நரசிம்மா, சந்திரமுகி, ரோபோ அப்படின்னு நிறைய படங்கள் ஓடிருக்கு. ஆனா எனக்காக ஓடல. நல்ல படங்கள்ல நானும் இருந்தேன். அதனால ரசிச்சாங்க.

ஒரு படம் சூட்டிங்கின் போதே சில மேஜிக் நடக்கும். ஆனால், அது நம்ம கையில கிடையாது.

தர்பார் பட சூட்டிங்கின் போதே நிறைய மேஜிக் நடந்திருக்கு.

கதை, திரைக்கதை, இசை, டெக்னிக்கல் டீம் இப்படி எல்லாமே படத்துக்கு உயிர் கொடுத்திருக்காங்க.

நான் இதுவரை 160 படங்கள் மேல பண்ணியிருக்கேன். தர்பார் படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம்.

நீங்க என் மேல வச்சிருக்கிற அன்புக்கு நான் என்ன சொல்றதுன்னே தெரியலை, உங்க எல்லாருக்கும் கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajinikanth emotional speech at Darbar Pre release event at Hyderabad

Facebook Comments

Related Articles

Back to top button