சமீபகாலமாக சினிமாவில் கதை திருட்டு என்பது வழக்கமான செயல் என்றாகிவிட்டது. துணை இயக்குனர்களின் கதை, இணை இயக்குனர்களின் கதை என பலரின் கதைகள் திருடப்பட்டு அதை படமாக்கி வெற்றி கண்ட இயக்குனர்கள் நிறைய பேர்..
அந்த வரிசையில், மலையாளத்தில் ‘லவ்’ என்ற படம் நெட்பிளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. பலரின் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதை தன்னுடையது என ‘டூ’ படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் பத்நாபன் கூறியுள்ளார்.
இவர் 2016 ஆம் ஆண்டு ‘ருசி கண்ட பூனை’ என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். பலராலும் பாராட்டப்பட்ட இக்குறும்படம் சுமார் 18 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.
ஆம், இக்குறும்படத்தை தான் அப்படியே ‘லவ்’ என்ற படமாக மலையாளத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்.
இதனால், அதிர்ச்சியடைந்த இயக்குனர் ஸ்ரீ ராம்பத்மநாபன், வளரும் இயக்குனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சினிமாவில் திருடர்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்ட காரணத்தால் தங்கள் கதைகளை பேணிகாத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். மேலும், குறும்பட இயக்குனர்களின் திறமை இப்படியாக சுரண்டப்படுகிறதே என்ற ஆதங்கத்தை கொட்டுவதை தவிர வேறென்ன சொல்ல என்ற மனவேதனையுடன் கூறியுள்ளார்.