செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு, சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.
இது முடிந்தபிறகு அவர் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். அது மட்டுமின்றி இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வந்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதற்குமுன் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்த சிலம்பாட்டம் படம் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments