கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது, ‘ஆலை மூடப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு விவசாயிகள் ஆதரவு என்ற தோற்றத்தினை உருவாக்க ஸ்டெர்லைட் ஆலையின் சில நிர்வாகிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கோவில்பட்டி பகுதியில் விவசாயிகள் அல்லாத சிலரை வைத்து கொண்டு, விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் ஆலைக்கு ஆதரவு என்ற தோற்றத்தினை ஏற்படுத்த நினைக்கிறது.
கோவில்பட்டி பகுதியில் இப்பணியை கடந்த ஒரு வாரகாலமாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி ஸ்டெர்லையை நோக்கி சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம்.’ என்று கூறினார்.
Facebook Comments