Spotlightசினிமா

₹8.39 கோடி சம்பள விவகாரம்: ‘பராசக்தி’ படத்திற்காக உயர்நீதிமன்றத்தை நாடிய சுதா கொங்கரா!

யக்குநர் சுதா கொங்கரா, தனது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்திற்காக வழங்கப்பட வேண்டியதாகக் கூறப்படும் ₹8.39 கோடி சம்பளத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், தயாரிப்பு தரப்பினரிடமிருந்து தனக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்றுத் தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், சம்பள விவகாரம் தீர்வு காணப்படும் வரை திரைப்படத்தின் செயற்கைக்கோள் (Satellite) உரிமை தொடர்பான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜூலை 8 வரை ‘பராசக்தி’ திரைப்படத்தின் செயற்கைக்கோள் உரிமை வெளியீடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க வேண்டாம் என்று இடைக்காலமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜூலை 10 அன்று வெளியாக திட்டமிடப்பட்டுள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் வெளியீட்டையும் தற்காலிகமாகத் தடுக்க வேண்டும் என சுதா கொங்கரா தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button