மத்தியில் பா.ஜ.க கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி என்று ரஜினி கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது,
காங்கிரஸ் கடுமையாக உழைக்கவில்லை,
காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்களை எப்படி கையாள்வது என்று ராகுல் காந்திக்கு தெரியவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்துள்ள வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி,
தமிழகம் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மோடிக்கு எதிரான அலை வீசியதால் தோல்வியை தழுவ நேர்ந்தது.
தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
கோதாவரி காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் நிதின் கட்கரி கூறி இருப்பதை வரவேற்கிறேன்.
ராகுல் காந்தி பதவி விலக முன்வந்திருப்பது அவரது இயலாமை அல்ல காங்கிரஸ் போன்ற பழமையான கட்சியில் மூத்த தலைவர்களை கையாள்வது மிகவும் கடுமையான பணி.
தேர்தல் தோல்விக்காக ராகுல் காந்தி பதவி விலகக் கூடாது தொடர்ந்து அரசியலில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கூறினார்.