Spotlightசினிமா

அரண்மனையை காலி செய்து டாப் கியரில் செல்லும் “டாக்டர்”!!

 

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தான் ” டாக்டர்”.

இப்படம் வெளியான முதல் நல்ல ஒரு விமர்சனத்தை பெற்றதால், திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் படையெடுத்தது.

கொரோனா 2வது அலை தாக்கத்திற்கு பிறகு மக்களை மீண்டும் திரையரங்கிற்கு கொண்டு வந்த பெருமை “டாக்டர்” படத்தையே சாரும்..

இந்த நிலையில் தான் கடந்த வியாழன் அன்று சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிக்க வெளியான திரைப்படம்  “அரண்மனை 3.

அரண்மனை 1, 2 தொடர்ச்சியாக 3 ஆம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கியிருந்தார்.

முதல் 2 பாகத்தை காட்டிலும் 3ஆம் பாகம் படும் தோல்வியடைந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றதால், மார்க்கெட்டில் போதுமான வரவேற்பை ” அரண்மனை 3″ ஆல் பெற முடியவில்லை….

இதனால், திரையரங்கில் மீண்டும் டாக்டர் படக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் படத்திற்கு இரண்டாவது வாரத்திலும் அதிக வரவேற்பு உள்ளதால், பல திரையரங்குகள் அரண்மனை 3 காட்சிகளை குறைத்து டாக்டர் பட காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button