
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘ பணத்திற்காக கொலை, கொள்ளைகள் நடப்பதாக செய்திகள் வருவதாகவும், எந்த ஆட்சி வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் நடப்பதாகவும் கூறினார்.
இந்த குற்றங்களுக்கும், ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். பொதுமக்களுக்கும் நல்ல அறிவுரைகள் கூறப்படுவதாகவும், இதனை ஏற்று, அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.’ என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
Facebook Comments





