Spotlightசினிமா

மூன்றாவது முறையாக விஷ்ணு வர்தனோடு கைகோர்க்கும் தல ’அஜித்’!

பில்லா படத்தின் மூலம் தான் அஜித் – விஷ்ணு வர்தன் நட்பு தொடங்கியது. 80களில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் தான் அது. ஆனால் அதில் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷாக காட்டி இருப்பார். அதை தொடர்ந்து ஆரம்பம் படத்தில் இணைந்தார்கள். அதன் பின்னர் விஷ்ணு வர்தனை வெய்யிட்டிங் லிஸ்டில் வைத்திருந்தார் அஜித். விஷ்ணு வர்தன் ஒரு சரித்திர கதையை அஜித்துக்காக தயார் செய்து வைத்திருந்தார் என்றும் செய்தி வெளியானது.

அஜித் அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது. படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1ந்தேதி கொண்டு வர திட்டமிடுகிறார்கள்.

அதற்கு அடுத்து அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது அஜித்தின் 61வது படமாக இருக்கும். இதை அடுத்த தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button