தன்னிடம் படம் நடித்து தருவதாக கூறி சுமார் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு, ஏமாற்றி விட்டதாக மதுரையை சேர்ந்த மணிவர்மா என்பவர் நடிகர் உதயா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்..
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் உதயா, ‘ மதுரையை சேர்ந்த மணிவர்மா என்பவர், என் மீது ரூபாய் 25லட்சத்துக்கு மோசடி புகார் கொடுத்ததாக.. பத்திரிக்கையில் வெளியான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
உத்தரவு மகாராஜா திரைப்படத்திற்காக இம்பாலா சினிமாசிடம் நான் வாங்கிய பணத்தை, இம்பாலா சினிமா உரிமையாளர்களில் ஒருவரான திரு.கார்த்திக் அவர்களிடம் முறையாக செலுத்திவிட்டுத்தான் என் படத்தை வெளியிட்டேன்.
ஆனால், திரு. மணிவர்மா, தன் குடும்ப பிரச்சினையில்… தேவையில்லாமல் என் பெயருக்கு களங்கமும்,என் படத்திற்கு பிரச்சினையும் உருவாக்கும் வகையில்.. மதுரை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் எனக்கு கெட்டபெயர் ஏற்படுத்தியுள்ள திரு. மணிவர்மா மீது ரூபாய் ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடருவேன்.” என கூறியுள்ளார்.
இத்துடன் நடிகர் உதயா, மணிவர்மாவிற்கு அளித்த 10 லட்சம் அனுப்பியதற்கான ஆதாரமும் இணைக்கப்பட்டுள்ளது.