புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி(19). இவர் நர்சிங் படித்து அங்குள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார்.
அதிரான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(22). இவர் மெடிக்கல் ஷாப் எதிரே ஒரு உள்ள டாட்டா ஏஸ் வாகனத்தின் டிரைவராக பணியாற்றுகிறார்.
இதனால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் மெடிக்கல் ஷாப் மூடப்பட்டுவிட்டது. இதையடுத்து கஸ்தூரியை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அருகேயுள்ள தைலமரக்காட்டிற்கு சென்றுள்ளார் நாகராஜன்.
அந்த நேரத்தில் கஸ்தூரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார் கஸ்தூரி. பதறிய நாகராஜன், குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துள்ளார். உடனே கஸ்தூரி மரணமடைந்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த நாகராஜன், கஸ்தூரியின் உடலை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அதிராம்பட்டினர் அம்புளி ஆற்றின் அருகேயுள்ள பாலத்தின் அடியில் போட்டு விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.