
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் விவசாய மக்களுக்கு பல இளைஞர்கள், பொது சேவை மையங்கள் என அனைவரும் நிவாரண பணிகளை மேற்க்கொண்டு வரும் நிலையில், நடிகர் அதியும் நிவாரண பொருட்களை நேரில் சென்று அளித்துள்ளார்.
ஆதி மற்றும் அவரின் குழு புயலால் பாதிக்கப்பட்ட”மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல படாத பகுதிகளை கண்டடைந்து “பேராவூரணி”, அறந்தாங்கி” பகுதியை சுற்றியுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த’புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 520 குடும்பங்களுக்கு, தற்போதைய முக்கிய தேவையான சுமார் 5டன் எடை கொண்ட பொருட்கள் – தார்பாய் – சோலார் லைட்- கொசுவலை – போர்வை – மருந்துகள்-மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார்.
மேலும் அவர் பேசும் போது, ‘ அங்கு சென்று பார்த்ததில் மிக பெரிய பேரிடரை சரி செய்யவும், விவாசாய மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவும்,அனைவரும் ஒன்று சேர்ந்து உதவி செய்ய முன்வர வேண்டும்.’ என்று கேட்டுக்கொண்டார்.





