
பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த விமான்படை விமானி அபிநந்தனின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் இந்திய நாடே பெரும் கவலையில் மூழ்கியுள்ளது.
இதனால் ஊடகங்கள் காட்சி எடுக்கவோ, பேட்டி எடுக்கவோ வேண்டாம் என அபிநந்தனின் தந்தை வர்த்தமான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இந்தியா முழுவதும் தொடர்ந்து குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
போர் வேண்டாம் எனவும் அபிநந்தனை பத்திரமாக மீட்டுக் கொண்டு வரவும் #SayNoWar என்ற ஹஷ்டேக் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Facebook Comments





