
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், 144 தடை உத்தரவை அமல்படுத்தியும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இருந்தாலும், மக்கள் இதை ஒரு சீரியஸாக எடுத்துக் கொள்ளால், இயல்பாக இருப்பது அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, ‘
வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்பட்டுள்ளது
மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
144 தடை உத்தரவை கடுமையாக்குவதை தவிர அரசுக்கு வேறுவழி இல்லை
பொதுமக்கள் 144 தடை உத்தரவை பின்பற்றாவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை.’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Facebook Comments





