
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
நேற்று வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக இருந்த நிலையில், இன்று மட்டும் 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மொத்தம் 8 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, 7267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
Facebook Comments





