SpotlightUncategorizedசினிமா

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்!!

நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டவரும், ஒற்றைப் பனைமரம், சிப்பாய் ஆகிய படங்களை தயாரித்து வருபவருமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவருக்கு இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே திரைப் படங்களின் இயக்குனர் மு.மாறன், நிர்வாக தயாரிப்பாளர் & மக்கள் தொடர்பாளர் இரா குமரேசன், நிர்வாக கன்ட்ரோலர் கே.எஸ்.சங்கர் ஆகியோர் நேரில் சென்று எஸ்.தணிகைவேல் அவர்களுக்கு மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

எஸ்.தணிகைவேல் அடுத்ததாக ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரித்துவருகிறார். இப்படத்தை மு.மாறன் இயக்க இருக்கிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button