இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
அதிலும், தமிழகத்தில் சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 1000 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா மரணங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதே. இங்கு முழு அளவில் லாக் டவுன் செய்வதற்கான திட்டம் தமிழக அரசிடம் உள்ளதா .? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர்.
இன்று தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக தயாராக உள்ளதா..? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.