Spotlightதமிழ்நாடு

மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை – வானிலை ஆய்வு மையம்!

மிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 18ந்தேதி வரை மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும், இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button