Spotlightசினிமா

பட்டப்பகலில் முன்னாள் மேயர் வெட்டிக் கொலை.. நெல்லையில் பயங்கரம்!

நெல்லையில் திமுகவை சேர்ந்த முன்னாள் மாநகராட்சி மேயர் உமாமகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சி திமுக முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி, மாநகராட்சியின் முதல் மேயர் இவர் தான். அவருடைய கணவர் முருகசங்கரன் நெடுஞ்சாலை துறை ஓய்வு பெற்ற பொறியாளர்.

உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் வீட்டில் இருக்கும் போது இன்று பிற்பகல் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேரையும் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக்காக கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்து பிரச்சணையா? குடும்ப தகராறா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button