தமிழகத்தில் மே 3 வரை தற்போது இருக்கும் 144 தடை உத்தரவு தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்த தடை உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீடித்தார்.
ஆனால், ஒரு சில நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஏப்ரல் 20ம் ஆம் தேதிக்குப் பிறகு ஒரு சில கட்டுப்பாட்டுகள் விதித்து இயங்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த அனுமதி தமிழகத்திற்கு பொருந்துமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
அதன்படி, தமிழகத்தில் மே 3 வரை இதே நிலை தான் தொடரும் எனவும், 144 தடை உத்தரவு நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.
நோய்த்தொற்று குறைந்தால் வல்லுனர் குழுவின் ஆலோசனையை பெற்று நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவு எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.