காட்டுக்குள் நடக்கும் மர்மம்… ‘தூங்கா கண்கள்’
வினு இயக்கத்தில் மைக்கேல், நிக்கி, நேகா, நிகிதா, ஆதி நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “தூங்கா கண்கள்”.
புதையலைத் தேடி காட்டுக்குள் பயணிக்கும் சிலர், அங்கு இருக்கும் அமானுஷ்யம் கொண்ட தீய சக்தியிடம் மாட்டிக் கொண்டு பலியாகின்றனர்.
இறுதியாக அந்த அமானுஷ்ய சக்தியை அழித்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
சீட்டின் நுனியில் ரசிகர்களை அமர வைக்கும் விதமாக காட்சிகளை மிக அருமையாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இமயவன்
இசையில் மிரட்டியிருக்கிறார் இளங்கோ கலைவானன்.
அனைத்து ரசிகர்களையும் எளிதாக கவரும் வகையில் தூங்க கண்களை இயக்கியிருக்கிறார் இயக்குனர் வினு.
Facebook Comments